சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர் பிரேமா. இவரது மகள் அகிலபிரதிஷ்டா (20). கல்லூரி மாணவியான இவர் நேற்று (ஏப்.10) மாலை அவரது பாட்டி வீட்டிற்கு சென்று வருவதாக கூறிச் சென்ற நிலையில் சிறிது நேரம் கழித்து தாயாரை தொடர்பு கொண்டு தான் விரும்பிய அபிஷேக் என்பவருடன் ஊரை விட்டு செல்வதாக கூறிவிட்டு செல்லை சுட்ச் ஆப் செய்துள்ளார். இதுகுறித்து சின்னமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.