தேனி மாவட்டம், அனுமந்தன்பட்டியை சேர்ந்தவர் பவுல்ராஜ் (60). இவர் தனியாக வசித்து வரும் நிலையில் கடந்த மாதம் வீட்டிற்கு வெளியே தானாக தவறி விழுந்துள்ளார். இதில் அவர் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பவுல்ராஜ் நேற்று (ஏப்.10) உயிரிழந்தார். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு.