சத்தியமங்கலத்தில் குடும்ப தகராறில் விபரீதம்
சத்தியமங்கலம் அருகே பரிதாபம் காதல் திருமணம் செய்த பெண் தூக்கு போட்டு தற்கொலை;
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கீழ் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் கோமதி. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு மகன்கள் உள்ளனர். நிலையில் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கோமதி கணவரைப் பிரிந்து வந்துவிட்டார். அவரது இரண்டு மகன்களையும் கணவரிடம் விட்டுவிட்டு வந்து விட்டார். அப்போது தண்ணீர் கேன் போட வந்த சத்தியமங்கலத்தை சேர்ந்த கிளிண்டன் என்பவருக்கும் கோமதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. என்ன கோமதியும் கிளின்டனும் திருமணம் செய்து கொண்டு காந்திநகரில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தனர். இந்நிலையில் கிளின்டன் அடிக்கடி குடித்து விட்டு வந்து கோமதியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக கோமதி தனது தாயிடம் கூறி புலம்பியுள்ளார். மேலும் தனக்கு எதுவும் வாங்கித் தர மறுக்கிறார் மற்றவர்களுக்கு ஓடி சென்று வாங்கி தருகிறார் என்று கூறி வேதனை பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று கிளின்டன் கோமதியிடம் வெளியே சென்று வருவதாக கூறி கிளம்பி சென்றார். பின்னர் மீண்டும் கிளின்டன் வீட்டுக்கு வந்தார். வீட்டு கதவைத் தட்டியுள்ளார். ஆனால் பதில் ஏதும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்து கதவு ஓட்டை வழியாக எட்டிப் பார்த்தபோது கோமதி தூக்கு போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து சத்தியமங்கலம் தீணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து கோமதியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். தங்க அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே கோமதி இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.