செல்லம்பட்டி: அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு.
செல்லம்பட்டி: அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு.;

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள செல்லம்பட்டி கூட்ரோடில் அ.தி.மு.க., சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கபட்டது. இதில் கிருஷ்ணகிரிகிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ நேற்று நீர் மோர் பந்தல் திறந்து வைத்தார். இதில் நீர்மோர், இளநீர், தர்பூசணி, கூல்டிரிங்ஸ் உள்ளிட்டவை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் காவேரிப்பட்டணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், உள்ளிட்ட அ.தி.மு.காவினர் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.