ஆற்காடு நகராட்சி பகுதியில் அமைந்துள்ள சரபேஸ்வரர் ஆலயத்தில் மகா சரபேஸ்வரர் யாகம் சிறப்பு வழிபாடு இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு சரபேஸ்வரருக்கு பல்வேறு வாசனை திரவியங்கள், பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.