மதுபோதையில் மனைவியை தாக்கியவர் மீது வழக்கு

தாராபுரம் அருகே மதுபோதையில் மனைவியை தாக்கியவர் மீது வழக்கு;

Update: 2025-04-14 06:36 GMT
தாராபுரம் அருகே உள்ள பஞ்சப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரவி (வயது 47). கூலித் தொழிலாளி. இவரது மனைவி அம்சவேணி. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. ரவி தினமும் குடித்துவிட்டு மனைவி மற்றும் குழந்தையை அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மீண்டும் ரவி போதையில் தகராறு செய்து அம்சவேணியை தாக்கி உள்ளார். இது குறித்த புகாரின் பேரில் தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News