அழியா நிலையில் மணல் அள்ளிய மாட்டுவண்டிகள் பறிமுதல்

குற்றச்செய்திகள்;

Update: 2025-04-15 05:29 GMT
அறந்தாங்கி அருகே அழியா நிலை பகுதியில் நேற்று அரசால் தடை செய்யப்பட்ட மணலை அள்ளப்படுவதாக அறந்தாங்கி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற காவல்துறையினர் அங்குள்ள ஆற்றில் மணல் அள்ளிக் கொண்டிருந்த மருதமுத்து (70), பிரதீபன் (36), கருப்பையா (47), ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களுடைய 3 மாட்டு வண்டிகள் மற்றும் தலா கால் யூனிட் மணலையும் பறிமுதல் செய்தனர்.

Similar News