
உத்தமபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (57). ராஜா (55). இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள டீ கடை ஒன்றில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் ராஜாவை கடை உரிமையாளா் வேலையை வீட்டு நீக்கிவிட்டாா். இதற்கு சுப்பிரமணியன் தான் காரணம் என நினைத்து நேற்று (ஏப்.14) கடையில் இருந்த சுப்பிரமணியனை கத்தியால் குத்தி விட்டு ராஜா தப்பியோடிவிட்டார். தகவலறிந்த போலீசார் ராஜாவை கைது செய்தனர்.