திருநெல்வேலி மாநகராட்சியில் நேற்று (ஏப்ரல் 15) மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.இதில் 15வது வார்டுக்கு உட்பட்ட கோட்டையடி தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்கள் வசிக்கும் பகுதியில் கூடுதலாக குடிநீர் நல்லிகள் வைத்து தரக்கோரி தமிழர் விடுதலைக் களம் சார்பில் மாவட்ட செயலாளர் முத்துக்குமார் தலைமையில் மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணனிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதில் தமிழர் விடுதலைக் களம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.