நெல்லை மாநகர தாழையூத்தில் புதியதாக ஆவின் பாலகம் திறப்பு விழா இன்று (ஏப்ரல் 16) நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சுகுமார் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி புதிய ஆவின் பாலகத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் ராஜு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.