குமரி : உடற்பயிற்சியாளர் மீது வழக்கு பதிவு  

தண்டவாளத்தில் தண்டால்;

Update: 2025-04-16 11:43 GMT
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தாமரை குட்டி விளை பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அதிகமான எடை கொண்ட பெருட்களை தூக்கி சாதனைகள் படைத்து வருகிறார். மூன்று முறை ஸ்ட்ராங் மேன் ஆஃப் இந்தியா பட்டம் வென்று உள்ளார். பல்வேறு எடை பிரிவு போட்டிகளில் பங்கேற்று சாதனைகள் பல படைத்து வருகிறார்.       இவர் தமது செயல்களை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். இன்னும் பல்வேறு செயல்களை செய்து உள்ளார். இவரது வீடியோ பதிவுகளை ஆயிரகணக்கான இளைஞர்கள் பின் தொடர்கின்றனர். எனவே இவரது வீடியோக்கள் அடிக்கடி வைரல் ஆகி வருகின்றன. அண்மையில் தமது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ளார். நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் நாகர்கோவில் சந்திப்பு என்ற பெயர் பலகையின் அருகில் உள்ள நடைபாதையை ஒட்டிய தண்டவாளம் அருகே நண்பர் ஒருவருடன் உடற்பயிற்சி செய்து அதை வீடியோவாகப் பதிவு செய்து, சமூக வலை தளத்தில் பதிவு செய்து உள்ளார்.   தண்டவாளத்தில் உடற்பயிற்சி செய்து வீடியோ வெளியிட்டும் கூட அவர் மீது இன்னும் நடவடிக்கை எடுக்காத து ஏன் என்று பலர் விமர்சித்துள்ளனர்.       இந்நிலையில் இந்த வீடியோ குறித்து விசாரணை மேற்கொண்ட ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

Similar News