திருவேங்கடம் கால்வாயில் அமலை செடிகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை
கால்வாயில் அமலை செடிகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் நிச்சப்ப நதியில் பிரிந்து காக்கா நதி கால்வாயில் விவசாயத்திற்கு செல்லக்கூடிய தண்ணீரை அமல செடிகள் ஆக்கிரமித்து தண்ணீர் செல்வதற்கு தடை ஏற்பட்டு வருகிறது. உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டு அமலை செடிகளை அகற்றி வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் இன்று கோரிக்கை விடுத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.