புளியங்குடி அருகே யோகா மாஸ்டர் மர்ம சாவு
யோகா மாஸ்டர் மர்ம சாவு :போலீசார் விசாரணை;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து புளியங்குடி செல்லும் சாலையில் உள்ள இருமன்குளத்தை சேர்ந்தவர் மருதையா என்ற மருதையா (50). யோகா மாஸ்டரான இருந்து வருகிறார். இவர் நேற்றிரவு புதிய வீடு கட்டும் இடத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதைக்கண்டா பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து புளியங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.