உசிலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிலம்பு (40). இவர் நேற்று முன்தினம் அவரது பைக்கில் போடிமெட்டு மலைச்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது எதிர் திசையில் ராஜாராம் என்பவர் ஓட்டி வந்த கார் இவரது பைக் மீது மோதியது. இதில் சிலம்பு படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து குரங்கணி போலீசார் நேற்று (ஏப்.16) வழக்கு பதிவு.