போடி நகர் காவல் நிலைய போலீசார் நேற்று (ஏப்.17) குற்றத்தடுப்பு சம்பந்தமாக ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது போடி அரசு மருத்துவமனை முன்பாக ராம்குமார், தங்கப்பாண்டி, கண்ணன் ஆகியோர் பணம் வைத்து சீட்டு ஆடியது தெரிய வந்தது. அவர்களிடமிருந்த சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்