தேனி, அரண்மனைபுதூர் பகுதியை சேர்ந்தவர் உதயசூரியன் (65). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்த நிலையில் நேற்று முன் தினம் ராஜா மற்றும் அவரது தந்தை அம்மாவாசை ஆகியோர் உதயசூரியனை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதுடன் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் தாக்குதல் நடத்திய இருவர் மீதும் நேற்று (ஏப்.17) வழக்கு பதிந்துள்ளனர்.