ஆண்டிபட்டி சின்னமல்லையாபுரத்தை சேர்ந்தவர் பெத்தன் (72). இவருக்கு 10 வருடம் முன் விபத்து ஏற்பட்ட நிலையில் அதன் காரணமாக உடலில் வலி ஏற்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு இடங்களில் சிகிச்சை எடுத்தும் தீராத நிலையில் வலியின் அவதியில் இருந்த பெத்தன் ஏப்.12 அன்று விஷம் அருந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (ஏப்.17) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.