க.விலக்கு காவல் நிலைய போலீசார் நேற்று (ஏப்.17) குற்ற தடுப்பு சம்பந்தமாக வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் 1.400 கிலோகிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் பைக்கில் வந்த வசந்த், பிரவீன்குமார் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்கள் இருவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வனசுந்தரி என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.