எஸ்டிபிஐ கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்
உறுப்பினர் சேர்க்கை முகாம்;
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் டவுன் நயினார் குளத்தில் இன்று (ஏப்ரல் 18) நடைபெற்றது.இந்த முகாமிற்கு டவுன் பகுதி தலைவர் போத்தீஸ் முகம்மது பாபு தலைமை தாங்கினார். இதில் இளைஞர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் தங்களை எஸ்டிபிஐ கட்சியில் இணைத்து கொண்டனர். புதிதாக இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. இதில் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.