புளியங்குடியில் அரசு மதுக் கடையை உடைத்து மது பாட்டில்கள் திருட்டு

அரசு மதுக் கடையை உடைத்து மது பாட்டில்கள் திருட்டு;

Update: 2025-04-19 03:26 GMT
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே புளியங்குடி நவாச்சாலை பகுதியில் உள்ள அரசு மதுக்கடையை வியாழக்கிழமை இரவு பூட்டிவிட்டு அதன் ஊழியா்கள் சென்று விட்டனராம். காலை போலீஸாா் அப்பகுதியில் ரோந்து சென்றபோது மதுக்கடை உடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்ததாம். இதையடுத்து, ஊழியா்கள் கடைக்குள் சென்று பாா்த்தபோது கடையில் இருந்த மது பாட்டில்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதை தொடா்ந்து புளியங்குடி டிஎஸ்பி மீனாட்சிநாதன் பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டாா். கைரேகை நிபுணா்களும் தடயங்களை பதிவு செய்தனா். புளியங்குடி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Similar News