கருங்கல், துண்டத்து விளை கிறிஸ்தவ ஆலயத்தில் இருந்து புனித வெள்ளி முன்னிட்டு ஆண்டுதோறும் இயேசுவின் சிலுவை பாடுகளின் 14 நிகழ்வுகளை நினைவு கூறும் வகையில் தத்ரூபமாக நடித்துக் காட்டியபடி கருணை மாதா மலைக்கு ஊர்வலம் வர செல்வது வழக்கம். அதன்படி நேற்று 45 ஆண்டாக புனித வெள்ளி அன்று திருச்சிலுவைப் பயணம் நடைபெற்றது. காலையில் ஆலயத்திலிருந்து புறப்பட்ட இந்த பவனியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பின்னர் ஊர்வலமாக சென்று மலை உச்சியில் தியான மண்டபம் சென்று அங்கு இயேசு கிறிஸ்துவை கொல்லப்படும் காட்சியை தத்ரூபமாக நடித்து காட்டி நிகழ்ச்சி நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கு பணியாளர்கள், அருள் சகோதரிகள், ஊர் பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.