திருக்கோவிலூர் தாலுக்கா அலுவலகத்தில் இன்று மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி திருக்கோவிலூர் சார் ஆட்சியர் ஆனந்த் குமார் சிங் தலைமையில் நடைபெற்றது. இதில் 50 மேற்பட்ட நாட்டு ரக மரக்கன்றுகளை சார் ஆட்சியர் ஆனந்தகுமார் சிங் நட்டு வைத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வருவாய் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் மூர்த்தி உள்ளிட்ட வருவாய் துறையினர் கலந்து கொண்டனர்.