திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வெளுத்து வாங்குவதும் மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்வதும் வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில் இன்று காலை முதல் வெயில் வெளுத்து வாங்கிய நிலையில் தற்பொழுது சீவலப்பேரி, சந்தைப்பேட்டை, மறுகால்தலை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.