கலைஞர் கைவினைத் திட்டம் நேரலை
திண்டுக்கல்லில் கலைஞர் கைவினைத் திட்டம் நேரலை;
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர், சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று (19.04.2025) நடைபெற்ற அரசு விழாவில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், கலைஞர் கைவினைத் திட்டத்தை தொடங்கி வைத்து, 8,951 பயனாளிகளுக்கு ரூ.34.00 கோடி மானியத்துடன் ரூ.170 கோடி கடன் ஒப்புதல் ஆணைகளை வழங்கி, விழாப் பேருரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியின் நேரலை நிகழ்ச்சியை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துறை அலுவலர்கள், கைவினைக் கலைஞர்கள் தொழில் முனைவோர்கள் உட்பட பலர் நேரில் பார்வையிட்டனர்.