குமரி மாவட்டம் நடுத்தேரியை சேர்ந்தவர் செல்வராஜ் (55). ஆட்டோ டிரைவர். இவர் அதே பகுதியில் புதிய வீடு கட்டி உள்ளார். குடும்பத்தினர் அங்கு வசித்து வருகின்றனர். செல்வராஜ் நடுத்தேரியில் உள்ள பழைய வீட்டில் தங்குவது வழக்கம். இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு செல்வராஜ் பழைய வீட்டில் வந்து தங்கி உள்ளார். அதன் பிறகு செல்வராஜ் புதிய வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் சந்தைமடைந்த உறவினர்கள் நடுத்தேரியில் உள்ள வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது செல்வராஜ் நாற்காலியில் அமர்ந்தவாறு இறந்து, அழுகிய நிலையில் இருந்துள்ளார். இது குறித்து உறவினர்கள் இரணியல் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். செல்வராஜிற்கு ஏற்கனவே இரண்டு முறை மாரடைப்பு வந்ததாக தெரிகிறது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் தான் தற்போது இந்த மரணம் ஏற்பட்டுள்ளது. போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.