காண்ட்ராக்டர் தூக்கிட்டு தற்கொலை

முளங் குழி;

Update: 2025-04-21 07:54 GMT
விளவங்கோடு தொகுதி, முளங்குழி பகுதி சென்னித் தோட்டம் என்ற இடத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (71) கட்டிட காண்ட்ராக்டர். இவருக்கு சமீபகாலமாக காண்ட்ராக்டர் தொழிலில் சரியான வருமானம் இல்லாமல் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.       இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த செல்வராஜ் தனது வீட்டில் பின்புறத்தில் உள்ள கழிவறையில் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.      இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற மார்த்தாண்டம் போலீசார் செல்வராஜன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News