அல்லிநகரம் காவல்துறையினர் நேற்று (ஏப்.20) குற்றத்தடுப்பு சம்பந்தமாக ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது பெரியகுளம் சாலையில் உள்ள சந்திரசேகர் என்பவரது டீக்கடையில் சோதனை மேற்கொண்டதில் அவரது கடையில் சட்டவிரோதமாக புகையிலை விற்பனை செய்தது தெரியவந்தது. கடையிலிருந்து புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.