தேனி அல்லிநகரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (18). இவருக்கு கடந்த ஒரு வாரமாக அடிவயிற்றில் அதிக வலி இருந்து வந்துள்ளது. அதற்கு சிகிச்சை எடுத்து வந்த நிலையில் வலி குறையாத காரணத்தினால் மன வேதனையில் இருந்து வந்த ராஜா நேற்று முந்தினம் இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அல்லிநகரம் போலீசார் நேற்று (ஏப்.20) வழக்கு பதிவு செய்து விசாரணை.