திருக்கோவிலூர் பெரிய ஏரியில் தேவியகரம் கிராமத்தைச் சேர்ந்த ஹரி (29) கட்டட வேலை செய்யும் கூலி தொழிலாளி. இவர் நேற்று காலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவர் உறவினர்கள் தேடி வந்த நிலையில் இன்று காலை திருக்கோவிலூர் பெரிய ஏரியில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.