கம்பம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (54). இவர் நேற்று (ஏப்.21) தனது இருசக்கர வாகனத்தில் அப்பகுதியில் உள்ள சாலையை கடக்க முற்பட்டுள்ளார். அப்பொழுது எதிர் திசையில் மாரிசன் என்பவர் அவரது பைக்கில் இருவரை வைத்துக்கொண்டு அதி வேகமாக பைக்கை ஓட்டி வந்து கணேசன் பைக் மீது மோதியுள்ளார். இந்த விபத்தில் கணேசன் படுகாயம் அடைந்தார். மாரிசன் உள்ளிட்ட மூவர் சிறு காயங்கள் அடைந்தனர். கம்பம் வடக்கு போலீசார் விசாரணை.