தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு எம்.பி கண்டனம்

காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதல் குறித்து மதுரை எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.;

Update: 2025-04-23 06:23 GMT
காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதல் குறித்த மதுரை எம்.பி தனது கருத்தை சமூக வலைதளத்தில் கீழ்கண்டவாறு பதிவேற்றம் செய்துள்ளார். அதில் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கையும் , பாதிக்கப்பட்டோருக்கு உயர் சிகிச்சையும் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். தாக்குதலில் பலியானவர்களினுடைய குடும்பங்களின் துயரத்திற்கு ஆறுதல் கூற வார்த்தையற்று தவிக்கிறது தேசம் என்ற கருத்தை சமூக வலைதளத்தில் மதுரை எம்.பி வெங்கடேசன் பதிவு செய்துள்ளார்.

Similar News