வெயில் இருந்து தங்கள் பாதுகாத்துக் கொள்ள பொது மக்களுக்கு தவெக கட்சியினர் நீர்மோர் இளநீர் வழங்கினர்

பெரம்பலூர் மாவட்ட 100 டிகிரி தாண்டியுள்ள வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் பெரும் அவதி;

Update: 2025-04-24 17:45 GMT
ஆலத்தூரில் த.வெ.க சார்பில் நீர்மோர் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய தலைமை அல்லிநகர் தமிழக வெற்றிக் கழக சார்பாக நேற்றுடன் தொடர்ந்து 13 நாட்களாக பொதுமக்களுக்கு நீர்மோர், லெமன் ஜூஸ், தர்பூசணி, லெஸ்லி உள்ளிட்ட இயற்கை குளிர்பானங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். இதில் மாவட்டத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மக்கள் சேவையாற்றுவதே எங்கள் கடமை என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News