பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.;
அரியலூர், ஏப்.25 - ஜம்மு}காஷ்மீரின் பஹல்காமில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 26 சுற்றுலா பயணிகளுக்கு அரியலூரில் பாஜக சார்பில் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. செட்டி ஏரி கரை விநாயகர் கோயில் அருகே வைக்கப்பட்டிருந்த உயிரிழந்தவர்களின் படங்களுக்கு, நகர பாஜக தலைவர் அனிதா, மாநில நிர்வாகி கோகுல்பாபு உள்ளிட்டோர் மலர் தூவி, ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். :