செல்லப் பிராணிகளுக்கான வெறி நோய் தடுப்பூசி முகாம்

8 பூனைகள் உட்பட 120 நாய்களுக்கு தடுப்பூசி;

Update: 2025-04-26 06:12 GMT
நாகை கால்நடை மருத்துவமனையில், உலக கால்நடை மருத்துவ தினத்தை முன்னிட்டு, நாய், பூனை உள்ளிட்ட செல்ல பிராணிகளுக்கான வெறி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர். ராம்நாத் தலைமை வகித்து, வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளுக்கு வெறி நோய் தடுப்பூசி போடுவதின் அவசியம் குறித்து விளக்கி பேசினார். நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக நகராட்சி ஆணையர் லீனா சைமன் கலந்து கொண்டார். முகாமில், நாகை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 8 பூனைகள் உட்பட 120 நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. முகாமில், கால்நடை மருத்துவர்கள் பாலாஜி, கோவிந்தராஜ், முத்துக்குமார், பூபதி, சௌமியா, நிவேதா, லாரன்ஸ், முதுநிலை கால்நடை மருத்துவ மேற்பார்வையாளர் சங்கர், ஆய்வாளர் முருகேசன், பராமரிப்பு உதவியாளர்கள் சிவராகினி, பழனிச்சாமி புவனரோகிணி, தேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News