மணல் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் மீது வழக்கு பதிவு
சிங்கம்புணரி அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் மீது வழக்கு பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன;
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மூக்கன்பட்டி சின்ன எழுவனில் மணல் திருட்டு நடைபெறுவதாக காயாம்பட்டி குரூப் கிராம நிர்வாக அலுவலர் பாலவெங்கடேஷ் எஸ்.வி.மங்களம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரின் அடிப்படையில் ஆய்வாளர் ஜெயசித்ரா பஷீர் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்