மடப்புரம் கிராமத்தில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில்
கீழ்வேளூர் வேளாண் கல்லூரி மாணவர்கள் செயல் விளக்கம்;
நாகை மாவட்டத்தில், வேளாண் கள செயல் விளக்கம் கீழ்வேளூர் வேளாண்மை கல்லூரி மாணவர்களால் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து மாணவர்கள், கீழையூர் ஒன்றியம் மடப்புரம் கிராமத்தில், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், பயிர்களில் ஈரப்பதத்தை தக்க வைக்கவும், களைகளை தவிர்க்கவும், தழைக்கூளம் உருவாக்கும் முறையை செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். மேலும், தென்னையில் நுண் ஊட்டத்தினை எருக்குச் செடியை கொண்டு இயற்கையாக பெருக்கும் வகையில் செயல்முறை மூலம் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர். இதனை, அக்கிராம விவசாயிகள் ஆர்வத்துடன் வரவேற்றனர்.