அரக்கோணம் தோல் ஷாப் பகுதியில் நேற்று இரவு சப் இன்ஸ்பெக்டர் நாராயணசாமி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சரண்குமார் என்ற வாலிபர் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. போலீசார் சரண்குமாரை கைது செய்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர் . கஞ்சா விற்பனை செய்பவர்களை கைது செய்து வரும் நிலையில் இப்போது கஞ்சா புகைத்தவரையும் கைது செய்தனர்.