தேனியில் தீ விபத்தில் மனநலம் பாதித்த பெண் உயிரிழப்பு

வழக்குப்பதிவு;

Update: 2025-04-27 10:37 GMT
தேனி அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்தவர் ராணி (55). இவருக்கு சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்னதாக அவரது வீட்டில் சமைப்பதற்காக மண்ணெண்ணெய் ஊற்றி அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக ராணி மீது தீ பற்றியது. இதில் படுகாயம் அடைந்த அவர் நேற்று (ஏப்.26) சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். விபத்து குறித்து அல்லிநகரம் போலீசார் வழக்கு பதிவு.

Similar News