மின்னல் தாக்கியதில் பட்டாசு ஆலை வெடிவிபத்து ஒரு அரை தரையில் மட்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
மின்னல் தாக்கியதில் பட்டாசு ஆலை வெடிவிபத்து ஒரு அரை தரையில் மட்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்;
சாத்தூர் அருகே மின்னல் தாக்கியதில் பட்டாசு ஆலை வெடிவிபத்து ஒரு அரை தரையில் மட்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் மதியம் 3 மணிக்கு மேல் மேக மூட்டத்துடன் இடி மின்னலுடன் லேசான சாரல் மழை பெய்து வந்தது இந்த நிலையில் சிவகாசி அருகே உள்ள சிவகாமிபுரம் பகுதியைச் சேர்ந்த மகாராஜன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை சாத்தூர் அருகே முத்தால் நாயக்கன் பட்டியில் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த பட்டாசு ஆலை டி.ஆர்.ஒ உரிமம் பெற்றது இந்த நிலையில் லேசான சாரல் மழை பெய்த நிலையில் பட்டாசு ஆலையில் உள்ள பட்டாசுகள் சேமித்து வைக்கும் அறை மீது திடீரென மின்னல் தாக்கியதில் அந்த அறை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. மேலும் இந்த விபத்தில் பட்டாசு சேமிக்கும் அறை முற்றிலும் சேதம் அடைந்து தரைமட்டமானது. மேலும் பட்டாசு சேமிக்கும் அறை அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் ஏற்றுச்செல்லும் சரக்கு வாகனம் லேசான சேதம் அடைந்தது. மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்பு வீரர்கள் இடிந்த கட்டிடத்தின் இடுபாடுகளில் இருந்த பட்டாசுகளில் எரிந்த தீயை விரைந்து அணைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த சாத்தூர் நகர் காவல் நிலைய போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இன்று பட்டாசு ஆலைக்கு விடுமுறை என்பதால் பட்டாசு ஆலை வெடி விபத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.