ராணிப்பேட்டை:அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி;

Update: 2025-04-28 04:40 GMT
திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுகா ஆவாரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அலங்கன் (வயது 78). ராணிப்பேட்டை அடுத்த லாலாபேட்டை கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகாத நிலையில், லேசாக மனநலம் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று சீக்கராஜபுரத்திலிருந்து லாலாபேட்டை செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அடையா ளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத் திற்கு விரைந்து வந்த சிப்காட் போலீசார், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News