ஊத்தங்கரை தாலுக்கா அலுவலகத்தில் (ஜமாபந்தி)
ஊத்தங்கரை தாலுக்கா அலுவலகத்தில் (ஜமாபந்தி);
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி ஊத்தங்கரை, பர்கூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி ஆகிய வட்டங்களில் 1434 ஆம் ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஊத்தங்கரை வட்டாட்சியர் மோகன் தாஸ் தலைமையில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ரமேஷ் குமார் கலந்துக்கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.