திருநெல்வேலி மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலம் 12வது வார்டுக்கு உட்பட்ட உடையார்பட்டி குடியிருப்பு பகுதியில் 3 தினங்களாக தண்ணீர் வராததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.இதனை தொடர்ந்து திருநெல்வேலி தமிழக வெற்றிக் கழக மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சுபர்தனா ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு இன்று 3000 லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டது. இதில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.