வீட்டின் முன் கீழே விழுந்த பெண் பலி.

மதுரை அருகே வீட்டின் முன் கீழே விழுந்ததில் பெண் மரணமடைந்தார்.;

Update: 2025-05-19 12:54 GMT
மதுரை மாவட்டம் சோழாங்குருணி சமத்துவப்புரத்தை வசிக்கும் பாண்டியின் மனைவி பாண்டியம்மாள்( 56) என்பவருக்கு சர்க்கரை நோய் உள்ளதால் அதற்கு சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை அவர் வீட்டு வாசலில் முன்பாக மயங்கி கீழே விழுந்ததால் அவரது உறவினர்கள் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் . இதனால் அவரது மகன் ஜோதிமணி பெருங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

Similar News