திருச்சுழி அருகே ஒட்டங்குளம் கிராமத்தில் வெகு விமரிசையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழா*
திருச்சுழி அருகே ஒட்டங்குளம் கிராமத்தில் வெகு விமரிசையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழா*;
திருச்சுழி அருகே ஒட்டங்குளம் கிராமத்தில் வெகு விமரிசையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழா விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள ஒட்டங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீஅய்யனார் , ஸ்ரீகருப்பணசாமி கோவில் வைகாசி புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு விழா இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்வதற்கு ஆன்லைன் வழியாக மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைப்படி 350 காளைகளுக்கு மேல் முன்பதிவு செய்திருந்தனர். மேலும் 200-க்கும் மேற்பட்ட காளை பிடி வீரர்கள் முன்பதிவு செய்திருந்தனர். மேலும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கனகராஜ் (பொறுப்பு) கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் போட்டியில் முதல் காளையாக கோயில் காளை வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. அரை மணி நேரத்திற்கு 30 வீரர்கள் என ஒவ்வொரு சுற்றுக்களாக பிற்பகல் வரை போட்டி நடைபெற்றது. வீரர்களுக்கு அடங்காத காளைகள் வீரர்களை தூக்கி வீசி எறிந்தன. களத்தில் சீறிப் பாய்ந்த காளைகளை, காளையர்கள் தீரத்துடன் அடக்கினர். மேலும் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளை உரிமையாளர்களுக்கும் கட்டில், ஏர்கூலர், பீரோ, அண்டா, டிவி, டிரெஸ்சிங் டேபிள், வெள்ளி காசுகள் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. காயமடைந்த மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் சிகிச்சை அளிக்க மருத்துவக்குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். மேலும் இந்த ஜல்லிக்கட்டு விழாவை முன்னிட்டு சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.