குளச்சல் : சிறுவர்களுக்கு கஞ்சா சப்ளை

ஒருவர் கைது;

Update: 2025-05-21 03:18 GMT
குமரி மாவட்டம் குளச்சல் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் தலைமையிலான போலீசார் நேற்று  தீவிர வாகன ரோந்து பணியில் ஈடுபட்டனர். வாணியகுடி பகுதியில் வைத்து சாலை ஓரம் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களுக்கு இரண்டு வாலிபர்கள் பொட்டலங்கள் கொடுத்ததை கண்டனர். உடனடியாக போலீசார் 2 பேர்களையும் பிடிக்க முயன்றனர். இதை கண்டதும், சுதாரித்துக் கொண்ட ஒருவர் தப்பி ஓடி விட்டார். ஒருவரை மடக்கி படித்தனர்.        விசாரணையில் அவர் சாஸ்தான்கரை பகுதி சேர்ந்த பிரசாத் (25) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய சோதனையில் அவரிடமிருந்து 5 கிராம் எடை கொண்ட நான்கு பொட்டலங்கள் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அவற்றை பறிமுதல் செய்து பிரசாந்தை கைது செய்தனர். தப்பி ஓடியது குளச்சல் பகுதியைச் சேர்ந்த சபீர் (23) என்பது தெரியவந்தது. அவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Similar News