வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நான்காவது கட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், அடுத்த கட்டமாக தொடர் போராட்டம் நடைபெறும் என விசைத்தறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.*

வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நான்காவது கட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், அடுத்த கட்டமாக தொடர் போராட்டம் நடைபெறும் என விசைத்தறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.*;

Update: 2025-05-23 12:54 GMT
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி வட்டார மருத்துவ துணி உற்பத்தி செய்யும் சிறு குறு விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு கோரி இன்று 12 ஆவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ரூபாய் 3.60 கோடி ஊதிய இழப்பும், 5000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை இழப்பும் ஏற்பட்டுள்ளது. வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நான்காவது கட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், அடுத்த கட்டமாக தொடர் போராட்டம் நடைபெறும் என விசைத்தறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி, சங்கர பாண்டியபுரம், அய்யனாபுரம், சமுசிகாபுரம் பகுதிகளில் மருத்துவத்துணி உற்பத்தி செய்யும் 500 க்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையாளர்கள் உள்ளனர். இவர்களிடம் உள்ள 5,000 விசைத்தறிகளை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் 5,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் சிறு குறு விசைத்தறி உரிமையாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட ஒப்பந்தம் இந்த வருடம் காலாவதி ஆகிவிட்ட நிலையில், தொழிலாளர்களுக்கு கடந்த முறை போடப்பட்ட அதே ஒப்பந்தம் அமல் படுத்தப்பட்டுள்ளது. ஆனால் சிறு குறு விசைத்தறி உரிமையாளர்களுக்கு கடந்த முறை போடப்பட்ட ஒப்பந்தமான முதல் வருடம் 13.5 பைசாவில் இருந்து இந்த ஆண்டு 1.5 குறைத்து 12 பைசாவும், அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு வழங்கி வந்த ஒன்பது பைசாவில் இருந்து இந்த ஆண்டு ஒரு பைசா குறைத்து தலா எட்டு பைசா மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்க மறுத்த விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். 12 நாட்களாக நடைபெற்று வரும் வேலை நிறுத்தம் காரணமாக சத்திரப்பட்டி வட்டாரத்தில் உள்ள ஐந்து ஆயிரம் விசைத்தறிகளை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் ‌வேலை பார்த்து வந்த ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். ரூபாய் 3.60 கோடி வரை ஊதிய இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற மூன்று கட்ட பேச்சு வார்த்தையிலும் உடன்பாடு ஏற்படாத நிலையில், வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து, சாத்தூர் எம்எல்ஏ டாக்டர் ரகுராமன், வட்டாட்சியர் வடிவேலு மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் நடைபெற்ற நான்காவது கட்ட முத்தரப்பு பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனைத் தொடர்ந்து விசைத்தறி உரிமையாளர்கள் ஒன்று கூடி அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Similar News