கம்பம் பகுதியை சேர்ந்தவர் உம்சுலைகாபீவீ (70). இவர் நேற்று (மே.24) கம்பம் வாரச்சந்தை பகுதி உள்ள சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்பொழுது அவ்வழியாக பாண்டியன் என்பவர் ஒட்டி வந்த சரக்கு வாகனம் உம்சுலைகாபீவீ மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து கம்பம் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.