ஓடைப்பட்டி காவல் நிலைய போலீசார் குற்றத் தடுப்பு சம்பந்தமாக நேற்று (மே.24) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது காமாட்சிபுரம் பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் ரமேஷ், பொன்னப்பன், ஆண்டவர், லக்ஷ்மணன், மாரிச்செல்வம் ஆகியோர் பணம் வைத்து சீட்டு ஆடியது தெரியவந்தது. அவர்களிடமிருந்த சீட்டு கட்டு மற்றும் பணத்தினை பறிமுதல் செய்த போலீசார் ஐந்து பேரையும் கைது செய்தனர்.