உத்தமபாளையம் அருகே கோகிலாபுரம் பகுதியில் அரசு மதுபான கடை இயங்கி வருகின்றது. இந்த கடையின் அருகில் உள்ள பாரில் பணியாற்றி வரும் அபிமன்யு என்பவர் நேற்று (மே.25) மதுபான கடையில் இலவசமாக மது கேட்டு தகராறில் ஈடுபட்டதுடன் காலி மது பாட்டில்களை கடை மீது எறிந்து சேதப்படுத்தியுள்ளார். இது குறித்த புகாரில் உத்தமபாளையம் போலீசார் அபிமன்யு மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.