தேனியில் மனைவி மற்றும் மகன் மீது தாக்குதல் நடத்திய கணவர் மீது வழக்கு
வழக்கு;
தேனியை சேர்ந்தவர் சாந்தி. இவரது கணவர் முருகன் அப்பகுதியில் சிக்கன் கடை நடத்திய நிலையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடையை மூடி விட்டார். இந்நிலையில் குடும்ப தேவைக்காக சாந்தி மற்றும் அவரது மகன் அப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் வேலைக்கு சேர்ந்துள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த முருகன் நேற்று இருவரையும் பிளேடால் கிழித்து தாக்கியுள்ளார். இது குறித்து போலீசார் முருகன் மீது வழக்கு பதிந்துள்ளனர்.